இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்திய அரசியல் உலகில் தற்போது பல புதிய கருத்து கந்தசாமிகள் உருவாகியிருக்கிறார்கள். அதிலும் ஊருக்கு ஒரு மாதிரி பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதிலும், ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று மொழிகளில் நடிப்பவர்கள் மாநிலத்திற்கு மாநிலம் ஒரு மாதிரி நடிப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் பிரகாஷ்ராஜ். பிரதமர் உள்ளிட்ட பலரை அவருடைய சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்வார். ஆனால், தமிழர்களுக்குப் பிரச்சினை என்றால் வாயைத் திறக்க மாட்டார்.
கன்னட சலுவாளி தலைவர் ஆன வாட்டாள் நாகராஜ், ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் கர்நாடகாவுக்குள் விடமாட்டோம். அவர்களது படங்களைத் திரையிடவிட மாட்டோம் என அறிவித்திருக்கிறார். இதற்கு இன்னும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் யாரும் எந்தவிதமான கருத்தையும் சொல்லவில்லை.
தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் பிரகாஷ்ராஜ், வாட்டாள் நாகராஜின் வம்புக் பேச்சுக்கு வெளிப்படையான கண்டனத்தைத் தெரிவிப்பாரா ?. தமிழ்நாட்டின் முக்கிய பிரபலங்கள் இருவரை விடமாட்டேன் என்ற ஆணவப் பேச்சை அவர் எதிர்கொண்டு பதிலளிப்பாரா என்று திரையுலகத்தில் உள்ளவர்களே கேள்வி எழுப்புகிறார்கள்.