ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
இந்திய அரசியல் உலகில் தற்போது பல புதிய கருத்து கந்தசாமிகள் உருவாகியிருக்கிறார்கள். அதிலும் ஊருக்கு ஒரு மாதிரி பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதிலும், ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று மொழிகளில் நடிப்பவர்கள் மாநிலத்திற்கு மாநிலம் ஒரு மாதிரி நடிப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் பிரகாஷ்ராஜ். பிரதமர் உள்ளிட்ட பலரை அவருடைய சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்வார். ஆனால், தமிழர்களுக்குப் பிரச்சினை என்றால் வாயைத் திறக்க மாட்டார்.
கன்னட சலுவாளி தலைவர் ஆன வாட்டாள் நாகராஜ், ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் கர்நாடகாவுக்குள் விடமாட்டோம். அவர்களது படங்களைத் திரையிடவிட மாட்டோம் என அறிவித்திருக்கிறார். இதற்கு இன்னும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் யாரும் எந்தவிதமான கருத்தையும் சொல்லவில்லை.
தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் பிரகாஷ்ராஜ், வாட்டாள் நாகராஜின் வம்புக் பேச்சுக்கு வெளிப்படையான கண்டனத்தைத் தெரிவிப்பாரா ?. தமிழ்நாட்டின் முக்கிய பிரபலங்கள் இருவரை விடமாட்டேன் என்ற ஆணவப் பேச்சை அவர் எதிர்கொண்டு பதிலளிப்பாரா என்று திரையுலகத்தில் உள்ளவர்களே கேள்வி எழுப்புகிறார்கள்.