மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், பிரபுதேவா நடித்துள்ள படம் மெர்க்குரி. சைலண்ட் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்தை ஏப்., 13-ம் தேதி ரிலீஸ் செய்ய போவதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடந்து வருவதால் கார்த்திக் சுப்பராஜின் முடிவுக்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படத்தை வெளியிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் எதிர்ப்புக்கு பணிந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் போராட்டத்திற்கு நான் உட்பட எனது மெர்க்குரி படக்குழு ஆதரவு தெரிவிக்கிறோம். பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை மெர்க்குரி படம் தமிழகத்தில் வெளியாகாது என நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். விரைவில் ஒரு நல்ல முடிவு ஏற்படும் என நம்புகிறோம் என தெரிவித்திருக்கிறார்.