ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையலகத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக பல கட்டப் பேச்சுவார்த்தைகள் மற்ற சங்கங்களுடன் நடைபெற்று வருகின்றன.
தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் விஷால், செயலாளர்கள் துரைராஜ், கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் மட்டுமே பேச்சு வார்த்தைகளில் பங்கு பெறுகின்றனர். ஆனால், துணைத் தலைவர்களாக இருக்கும் பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகிய இருவரும் இதுவரை நடைபெற்ற எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் பங்கு கொள்ளவில்லை.
தயாரிப்பாளர் சங்கத்திற்காக அவர்கள் இருவரும் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது சில கூட்டங்களில் மட்டும் தலை காட்டினார்கள். அதன்பின் சங்கத்தில் எந்தவிமான ஈடுபாடும் இல்லாமல் இருக்கிறார்கள்.
பிரகாஷ்ராஜ் பெங்களூருவிலேயேதான் பெரும்பாலும் இருக்கிறார். கௌதம் மேனன் மீது இதுவரை மூன்று பேர் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.