ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் திரையுலகினர் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறது. புதுப்படங்கள் வெளியாகவில்லை, படப்பிடிப்பு, அதுதொடர்பான மற்ற வேலைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டமும், லட்சக்கணக்கான பேர் வேலையும் இழந்துள்ளனர்.
ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர அரசின் உதவியை நாடியிருக்கிறது திரையுலகம். இதுதொடர்பாக சினிமா துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று கடம்பூர் ராஜூவை, விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர். திரையுலகத்தில் நிலவி வரும் பிரச்னை குறித்து விரிவாக பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு 2 நாளில் ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.