‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மகேஷ்பாபு நடித்த பிரமோற்சவம், ஸ்பைடர் ஆகிய படங்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி தோல்வியடைந்தன. தற்போது நடித்துள்ள பாரத் அனே நேனு படத்தை இரண்டு மொழிகளிலும் வெளியிட்டு வெற்றி பெற்று விடவேண்டும் என்று ஆசைப்படுகிறார் மகேஷ் பாபு.
தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நீடித்து வரும் நிலையில், ராம் சரணின் ரங்கஸ்தலம் படம் தமிழில் வெளியாகி பெரிய அளவில் வசூலை குவித்ததால், ஏப்ரல் 7-ந்தேதி வெளியாகும் தனது படத்தையும் தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வெளியிட மகேஷ்பாபு படக்குழு திட்டமிட்டு தியேட்டர்களை ரெடி பண்ணி வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்த்திரைப் பட தயாரிப்பாளர் சங்கத்தலைவரான விஷால், தெலுங்கு திரைப் பட தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, ஏப்ரல் 8-ந்தேதி முதல் எந்த தெலுங்கு படமும் தமிழ் நாட்டில் ரிலீசாகாது என்று அறிவித்துள்ளனர். இந்த திடீர் அறிவிப்பு மகேஷ் பாபுவுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.