தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
பஹத் பாசில் கதாநாயகனாக நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான படம் 'தொண்டிமுதலும் த்ரிக்சாட்சியும்'. இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நிமிஷா சஜயன். இந்தப்படத்திற்கு முன்பே மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்த 'கேர் ஆப் சாயிராபானு' என்கிற படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் அவருடன் நட்பை தொடர்ந்து வருகிறார் நிமிஷா.
இந்தநிலையில் மோகன்லால் மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் 'ஒடியன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்ட நிமிஷா சஜயன், மஞ்சு வாரியரிடம் மோகன்லாலை சந்திக்க வேண்டும் என்கிற தனது நீண்டநாள் ஆசையை வெளிப்படுத்தினார். காரணம் நிமிஷா மோகன்லாலின் தீவிர ரசிகையாம்.
மஞ்சு வாரியரும் நிமிஷாவை வரவழைத்து மோகன்லாலுடன் சந்திக்க வைத்துள்ளார். கதாநாயகியாக தற்போது இரண்டு படங்களில் நடித்துவரும் நிமிஷா, மோகன்லால் முன் ஒரு ரசிகையாக மாறிப்போய் விட்டாராம். “அந்த தருணத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை” என்கிறார் சிலாகிப்புடன்.