‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம் பெற்ற 'சொடக்கு...' பாடலின் லிரிக் வீடியோ, 'மெர்சல்' படத்தில் இடம் பெற்ற 'ஆளப் போறான் தமிழன்....' பாடலை விட பார்வைகள் எண்ணிக்கையைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. அதனால், நேற்று ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன் தேவையில்லாமல் ஏ.ஆர்.ரகுமானை நக்கலடிப்பது போன்று டுவீட் செய்திருக்கிறார்.
நன்றி தெரிவித்து அவர் பதிவிட்ட டுவீட்டில், 'எல்லாப்புகழும் சூர்யா மற்றும் அனிருத்திற்கே' என பதிவிட்டிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் எந்த சாதனை புரிந்தாலும் 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என சொல்வது வழக்கம். அதைக் கிண்டலடிக்கும் விதமாக விக்னேஷ் சிவன் பதிவிட்டிருப்பது ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களைக் கோபமடைய வைத்துள்ளது.