ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆர்யா நடித்த ராஜா ராணி விஜய் நடித்த தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியவர் அட்லி. அடுத்தபடியாகவும் விஜய்யை வைத்து தான் படம் இயக்கப்போவதாகவும் அதற்கான கதையை ரெடி பண்ணி வருவதாகவும் கூறி வந்தார் அட்லி.
தொடர்ந்து அட்லியின் இயக்கத்தில் நடிக்க விரும்பாத விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தை அடுத்து வெற்றிமாறன் அல்லது சதுரங்கவேட்டை வினோத் இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யின் இந்த முடிவினைத் தொடர்ந்து இதுவரை விஜய் எப்படியும் கால்சீட் தருவார் என்று நம்பிக்கொண்டிருந்த அட்லி இப்போது தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார். அல்லு அர்ஜூனை வைத்து தமிழ், தெலுங்கில் அடுத்த படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும், அல்லு அர்ஜூன் நடிக்கப்போகும் இந்த கதையை விஜய்க்காக அட்லி ரெடி பண்ணியது என்று கூறப்படுகிறது.