ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கியூப்புக்கு எதிரான போராட்டத்தை கடந்த மார்ச்1 ந்தேதி முதல் தமிழ்த்திரையுலகத்தினர் நடத்தி வருகின்றனர். அதன்காரணமாக திரையுலகில் வேலை நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு வருவதோடு, புதிய படங்கள் வெளியிடுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில தெலுங்கு படங்கள் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதனால் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் காரணமாக, தெலுங்கு திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி பேச்சுவார்த்தை நடத்தினார் விஷால். அதையடுத்து ஏப்ரல் 8-ந்தேதி முதல் எந்த தெலுங்கு படமும் தமிழ்நாட்டில் வெளியிடப்பட மாட்டாது என்று தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.