'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. சென்னை, எத்திராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஆடி கார் ஒன்று உள்ளது. யுவனிடம், நவாஸ்கான் என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை 5 மணிக்கு நவாஸ்கான், காரை எடுத்து சென்றுள்ளார். வெகுநேரமாகியும் கார் வீடு திரும்பவே இல்லை. யுவன் ஷங்கர் ராஜாவும் வீட்டில் இல்லாததால் கார் திருடப்பட்டதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து யுவன் சார்பில் சென்னை எழும்புர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்தநிலையில் இன்று(ஏப்.,3) அதிகாலை அவரே காருடன் வீட்டுக்கு திரும்பி உள்ளார். எதற்காக நவாஸ்கான் காரை எடுத்து சென்றார், நீண்டநேரமாகியும் திரும்பாதது ஏன் என விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே கார் திரும்பி வந்ததால் புகாரை வாபஸ் பெற எண்ணியுள்ளார் யுவன்.