ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இப்படி ஒரு போராட்டத்தை எப்படி நடத்தி விடுவார்கள் என பலரும் யோசித்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் ஒரு நேர் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சில சமயங்களில் சிலரால் அந்தப் போராட்டத்தை திசை திருப்ப நடந்த முயற்சிகள் அவர்களுக்கே பாதகமாக முடிந்தது.
கடந்த வாரம் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, இயக்குனர்கள் சங்கம், நடிகர் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆகியோர் பத்திரிகையளார்களைச் சந்தித்து ஸ்டிரைக் நிலவரம் பற்றி பேசினார்கள். அதன்பின் பெப்சி தலைவரான ஆர்.கே. செல்வமணி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளரான ரோகிணி பன்னீர் செல்வத்திடம் சில கேள்விகளை எழுப்பிய ஆடியோ பதிவு வாட்ஸ் அப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பன்னீர்செல்வம் ஒரு பதிலளித்திருந்தார். அவருடைய பதிலுக்கு ஆர்.கே.செல்வமணி மீண்டும் சில கேள்விகளை எழுப்பி, சந்தேகங்களைக் கேட்டிருக்கிறார்.
“என்றுமே திரையரங்கு உரிமையாளர்கள் பற்றி நான் தவறாகப் பேசியதில்லை. நான் கேள்வி கேட்பதெல்லாம் சங்கத்தின் செயலாளரான உங்களிடம் தான். உங்கள் உறுப்பினர்களின் முன்னிலையிலேயே நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் வெளிப்படையாகப் பதில் சொன்னால் அதன் பின் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நான் செய்கிறேன்,” என அவருக்கு சவால் விடுத்துள்ளார்.
சொந்தமாக புரொஜக்டர் வைத்துள்ள சில தியேட்டர் உரிமையாளர்களுக்கு, டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் விபிஎப் கட்டணத்தைத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்றுக் கொடுத்துள்ளது என்பது திரையரங்கு உரிமையாளர்கள் பலரிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலருக்கு மட்டுமே டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் 'தனி சேவை' செய்துள்ளதாக பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
நேற்று, அமைச்சர் தனி வாரியம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், தற்போதைய போராட்டம் அடுத்த வாரத்தில் முடிவுக்கு வரலாம் எனத் தெரிகிறது.