ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் என இரண்டு படங்களில் நடித்தார் விஜய். இவற்றில் மெர்சல் படம் மிகப்பெரிய வசூலை குவித்தாலும் படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்று சொல்லப்படுகிறது.
தேனாண்டாள் பிலிம்ஸால் இன்னும் அடுத்தப்படத்தை தொடங்கமுடியவில்லை. ஏற்கனவே தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட படங்களையும் நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் திரையுலகில் இருக்கும் சில தயாரிப்பாளர் அட்லீக்கு யாரும் படம் தரக்கூடாது என குரல் எழுப்பினர். அம்மா டி.சிவா வெளிப்படையாகவே இதை தெரிவித்தார்.
இந்நிலையில், மெர்சல் படம் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற நான்காவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் திரையிடப்பட்டதோடு, சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டதோடு விருதும் வழங்கப்பட்டது.
இதற்கிடையே விஜய்யிடம் கதை சொல்ல முயற்சி செய்திருக்கிறார் அட்லீ. அவரிடம் கதையைக் கூட கேட்காமல் பிறகு பார்க்கலாம் என்று அனுப்பி வைத்துவிட்டாராம் விஜய். இதனால் மனதளவில் பீல் பண்ணி வருகிறாராம் அட்லீ.