தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் அவருடைய கணவர் தனுஷ் ஹீரோவாக நடித்த '3' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.
ஐஸ்வர்யாவின் உறவினர் என்பதால் அனிருத்துக்கு 3 படத்தை தொடர்ந்து 'வேலையில்லா பட்டதாரி', 'மாரி' 'தங்கமகன்' ஆகிய திரைப்படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கொடுத்தார் அனிருத். அதுமட்டுமல்ல தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர்நீச்சல்', 'காக்கிச் சட்டை', விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரௌடிதான்' முதலான படங்களுக்கும் அனிருத்தையே இசை அமைக்க வைத்தார்.
தங்கமகன் படத்துக்கு இசையமைத்தபோது அனிருத் குறிப்பிட்ட தேதியில் பாடல்களை தராமல் இழுத்தடித்த காரணத்தால் தொடர்ந்து இவர்கள் இருவரும் எந்தப்படத்திலும் இணையவில்லை. இதை வைத்து தனுஷ், அனிருத் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் பெரியஅளவில் ஏற்பட்டது. அதனால்தான் சமீபகாலமாக தனுஷ் அனிருத் இருவரும் இணைந்து படங்கள் பண்ணவில்லை.
இதற்கு விளக்கம் தராமல் இதுநாள்வரை அமைதிகாத்து வந்த அனிருத் சமீபத்தில் எனக்கும், தனுஷுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை! மிக விரைவிலேயே, அதாவது 2019-ல் நாங்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவிருக்கிறோம்' என்று கூறியுள்ளார்.
இது உண்மையான தகவலா? பேட்டிக்காக சும்மா அடித்துவிட்ட பொய்யா என்பது விரைவில் வெட்ட வெளிச்சமாகும்.