இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ். கிறிஸ்துவராக இருந்தபோதிலும் இந்து மதத்தில் நம்பிக்கை உடையவர். ஏராளமான பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரின் ஹரிவராசனம் பாடல் தான் சபரிமலையில் ஒலிக்கிறது. சபரிமலையில் இவருக்கு தரிசனம் செய்ய அனுமதி உண்டு.
குருவாயூர் கிருஷ்ணனுக்காக யேசுதாஸ் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால் இந்த கோவிலில் இவருக்கு அனுமதி கிடையாது. வேற்று மதத்தினருக்கு இந்த கோவிலில் அனுமதி கிடையாது.
இந்நிலையில் திருச்சூரில், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் யேசுதாஸ். அவர் பேசியதாவது...
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நான் நுழைய சிறப்பு அனுமதி கோரவில்லை. என்னை அனுமதிப்பது பற்றி கோவில் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். விலக்கப்பட்டவர்களை அனுமதிக்கும் வரை கண்டிப்பாக என்னை அனுமதிக்க போவது இல்லை. உண்மையாக கடவுளை நேசித்து தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் போது அதில் கடைசி ஆளாக நான் இருப்பேன்.
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் என்னை அனுமதிக்கும் வரை வேறு எந்த கிருஷ்ணன் கோவிலையும் நான் தரிசிக்க போவது கிடையாது. நண்பருடன் உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றபோது கூட அங்கு இருந்தவர் கிருஷ்ணராக தெரியவில்லை, ராமராகத்தான் பார்த்தேன்.
வேதங்களை அனைவரும் கற்கும்போது இந்த உலகத்தில் அமைதி பிறக்கும். வேதம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினுள் போய் சிக்க கூடாது என்பது என் கருத்து.
இவ்வாறு யேசுதாஸ் பேசினார்.