'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்திருக்கிறார் ஸ்வாதிஷ்டா. சவரக்கத்தி படத்தில் மாற்றுத் திறனாளியின் காதலியாக நடித்தவர் இப்போது ஜீவாவுடன் கீ படத்தில் நடித்து வருகிறார். அதோடு மதம் என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். ஷாலினி இடத்தை நிரப்புவது தான் தன் ஆசை என்கிறார் ஸ்வாதிஷ்டா. அவர் மேலும் கூறியதாவது:
திரைத்துறையில் யாருடைய ஆதரவும் இல்லாமல் ஒரு பயணத்தை தொடங்கி நடப்பது சவாலான விஷயம். நான் தேர்ந்தெடுத்த இந்த பாதையில் தொடர்ந்து பயணிக்க எனக்கு முழு ஆதரவும், சுதந்திரமும் கொடுத்த என் பெற்றோருக்கு நன்றி. இளங்கலையில் எஞ்சினியரிங்கும், முதுகலையில் ஜர்னலிஸமும் படித்து, தொலைக்காட்சி தொகுப்பாளரானேன்.
நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். நான் ஜர்னலிஸம் படிக்கும்போதே எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன, நான் தான் நடிக்க தயங்கினேன். ஆனால், மிஷ்கினின் சவரக்கத்தியில் நடித்து பார்க்கலாம் என முயற்சித்தேன், இப்போது நிரந்தர நடிகை ஆகிவிட்டேன்.
அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர்கள் அழகு, திறமை ஆகியவற்றை சரிவிகிதத்தில் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய நடிப்பையும், ஆளுமையையும் நான் வியந்து பார்க்கிறேன். ஷாலினி அஜித்குமார் நான் பிரமித்து பார்க்கும் ஒரு நடிகை. அவருடைய வசீகரம், திறமை எல்லாம் அவரின் தனிச்சிறப்பு.
மணிரத்னம், அலைபாயுதே 2 படத்தை எடுப்பார், அதில் என்னை நாயகியாக நடிக்க வைப்பார் என்ற ஆசையும், கனவும் எனக்கு இருக்கிறது என்கிறார் ஸ்வாதிஷ்டா.