விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான 'மாரி' படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. பொதுவாக வெற்றிபெற்ற படங்களுக்குத்தான் இரண்டாம் பாகம் உருவாக்குவார்கள் என்பதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் 'மாரி' ஒன்றும் அவ்வளவு பெரிய வெற்றிப்படம் அல்ல..
ஆனால் ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ரீச்சான படம்.. அந்த வரவேற்பை காசாக்கத்தான் 'மாரி-2' எடுத்து வருகிறார்கள்.. ஆனால் முதல் பாகத்தை போல அல்லாமல் இந்தப்படத்தை வெற்றிப்படமாக்கும் சூட்சுமத்தை இயக்குனர் பாலாஜி மோகன் கண்டுபிடித்து விட்டாராம்.
அதாவது மாரி படத்தில் வில்லன் கதாபாத்திரமும் அதில் நடித்த நடிகரும் வலுவில்லாமல் போனதுதான் படத்திற்கு முக்கிய காரணம் என்பது பாலாஜி மோகனுக்கு தெரியவந்ததாம். அதனால் இரண்டாம் பாகத்தை உருவாக்கும்போது முதலில் வில்லனை வலுவான கேரக்டராக உருவாக்கி விட்டே, அதற்கடுத்து தனுஷின் கதாபாத்திரத்தை வில்லன்னுக்கேற்ற மாதிரி வடிவமைக்க ஆரம்பித்தாராம்.
அந்தவகையில் மிகவும் வலுவான வில்லன் கதாபாத்திரத்திற்கு மலையாள இளம் நடிகரான டொவினோ தாமஸ் பொருத்தமாக இருப்பார் என்பதால் தான் அவரை தமிழுக்கு அழைத்து வந்துள்ளாராம் பாலாஜி மோகன். இந்தப்படத்தில் வில்லன் என்றாலும் இரண்டுவித கெட்டப்பில் நடிக்கிறாராம் டொவினோ தாமஸ்.