ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையலகத்தில் ஒரு மாத காலமாக புதிய படங்கள் வெளியீடு இல்லாமல் தியேட்டர்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. திரைப்படம் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கையே தமிழ் ரசிகர்கள் ஏறக்குறைய மறந்துவிட்டார்கள். இதிலிருந்தே தமிழ் ரசிகர்கள் தமிழ்ப் படங்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். மற்ற மொழிப் படங்களுக்கு மிஞ்சிப் போனால் இரண்டு நாட்கள் மட்டுமே இங்கு வசூலை ஈட்ட முடியும்.
கடந்த வாரம் தயாரிப்பாளர் சங்கம் மற்ற சங்க நிர்வாகிகளுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது திரையுலகத்திற்கென்று தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். தேவைப்பட்டால் அப்படி ஒரு வாரியம் அமைக்கப்பட்டு திரையுலகப் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடியில் தெரிவித்துள்ளார்.
அதற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். அப்படி ஒரு வாரியம் அமைக்கப்படும் பட்சத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஸ்டிரைக் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. அரசு உடனடியாக அமைக்கவில்லை என்றாலும், விரைவில் அமைப்போம் என்று சொன்னாலே திரையுலகினர் ஸ்டிரைக்கை வாபஸ் பெறவும் முடியும். அதற்கான தீர்வை விரைவில் எட்டினால் இந்தத் தொழிலில் உள்ள தொழிலாளிகளுக்கும், பணம் முதலீடு செய்யும் முதலாளிகளுக்கும் விடிவுகாலம் பிறக்கும்.
காவிரி மண்சார்ந்த மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் தேவை காவிரி மேலாண்மை வாரியம். தமிழ்க் கலைஞர்களுக்குத் தேவை திரையுலக வாரியம். இரண்டு வாரியமும் இனிதே அமைந்தால் சிறப்பு.