தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த்திரையுலகில் மார்ச் 1-ந்தேதி முதல் ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் புதிய படங்களின் ரிலீஸ் மட்டுமின்றி, படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த அவரது 62வது படத்தின் படப்பிடிப்பு ஸ்டிரைக் அறிவிக்கப்பட்ட பிறகும் ஸ்பெசல் அனுமதியுடன் சில தினங்கள் நடத்தப்பட்டது.
அதை காரணம் காட்டி விஜய் சேதுபதியின் ஜூங்கா படப்பிடிப்பை நடத்த போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்றதாக புகார்கள் எழுந்தன. தற்போதுவரை அவர்கள் படப்பிடிப்பு நடத்திக்கெண்டிருக்கிறார்கள்.
இதையடுத்து, ஸ்டிரைக் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே வெளிநாடு செல்ல விசா மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கான லொகேசன் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அதற்கான பணத்தையும் கட்டி விட்டதால் தான் குறித்த தேதியில் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அப்படக்குழுவினர் தற்போது விளக்கமளித்துள்ளனர்.
ஆனால் இவர்களைப்போலவே ஏற்கனவே படப்பிடிப்புக்கு அவுட்டோர் செல்ல அனைத்து ஏற்பாடு களையும் செய்து வைத்திருந்து, பின்னர் ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்பை ரத்து செய்த தயாரிப்பாளர்களோ, தடையை மீறி படப்பிடிப்பு நடத்தி வரும் விஜய் சேதுபதி படக்குழு மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலத்த குரல் எழுப்பி வருகிறார்கள்.
இதனால் விஜய் சேதுபதியின் ஜூங்கா படக்குழு மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்களாம்.