பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமா கடந்த ஒரு மாதமாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. புதிய படங்கள் வெளியாகவில்லை. லட்சக்கணக்கான பேர் வேலையிழந்தும், கோடிக்கணக்கில் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
திரைத்துறை பிரச்னையை தீர்க்க அரசின் உதவியையும் நாடியிருக்கிறது தமிழ் திரையுலகம். இதனிடையே திரைதுறைக்கு என்று தனிவாரியம் அமைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி கோரிக்கை வைத்தது.
தனி வாரியம்
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, தேவைப்பட்டால் திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்றார். மேலும் தயாரிப்பாளர்கள் சங்க பிரச்னை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விஷால் நன்றி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், திரைத்துறை சம்மந்தபட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம் என்ற தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார்.