தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயனின் படங்களில் கட்டாயம் ஒரு மதுகுடிக்கிற காட்சி இருக்கும், பெண்களை கிண்டல் செய்வார், துரத்தி துரத்தி காதலிப்பார், குறிப்பாக ரெமோ படத்தில் தன்னை விரும்பாத கீர்த்தி சுரேஷை துரத்தி துரத்தி சென்று டார்ச்சர் கொடுத்து காதலிக்க வைப்பார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இனி அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
நடிக்க வந்த புதிதில் நான் சாதாரண சின்ன நடிகன், இப்படி நடிக்க மாட்டேன், அப்படி நடிக்க மாட்டேன் என்று என்னால் கூறமுடியாது. அதனால் இயக்குனர்கள் நான் எது செய்தால் நன்றாக இருக்குமோ அதை செய்ய வைத்தார்கள். நானும் செய்தேன். அதனால் அதையே திரும்ப திரும்ப பேச வேண்டாம்.
வேலைக்காரன் படத்திற்கு பிறகு எனக்கு சமூக பொறுப்பு கூடியிருக்கிறது. வேலைக்காரன் படத்தில் மது குடிக்கும் காட்சியோ, பெண்களை பகடி (கிண்டல்) செய்யும் காட்சியோ, பாடலோ இல்லை என்பதை யாருமே பாராட்டவில்லை. இருந்தாலும் பரவாயில்லை இனி வரும் எனது படங்களில் அப்படியான காட்சிகள் இருக்காது. என்னை இயக்கும் இயக்குனர்களும் பொறுப்புணர்ந்து அது மாதிரி காட்சிகளை வைக்க மாட்டார்கள் என்கிறார் சிவகார்த்திகேயன்.