Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பழம்பெரும் ஒளிப்பதிவாளரின் பரிதாபம்: மாரடைப்பில் இறந்தவர் அநாதை பிணமாக ஆஸ்பத்திரியில் கிடந்தார்

01 ஏப், 2018 - 11:53 IST
எழுத்தின் அளவு:
legendary-cinematographer-who-found-dead-as-orphan

பழம்பெரும் திரைப்பட போட்டோகிராபர் திருச்சி ஆனா ரூனா. நடிகர் திலகம் சிவாஜியின் ஆஸ்தான போட்டோகிராபர். இவரது மகன்கள் ரமேஷ்குமார், சுரேஷ்குமார். இருவரும் சினிமா ஒளிப்பதிவாளர்கள். சுரேஷ்குமார் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, என் தமிழ் என் மக்கள் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். புனே திரைப்படக் கல்லூரியில் தங்கமெடல் பெற்ற மாணவர்.

விபத்து ஒன்றில் சிக்கி உடல் பாதிப்படைந்த சுரேஷ்குமாருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் குறும்படங்கள், டாக்குமெண்டரி படங்களில் பணியாற்றி வந்தார். திருமணம் செய்து கொள்ளாத சுரேஷ்குமார் குரோம்பேட்டையில் தனியாக வசித்து வந்தார்.


இந்த நிலையில் கடந்த 27ந் தேதி கோடம்பாக்கம் வந்து விட்டு இரவில் குரோம்பேட்டை திரும்பிய சுரேஷ்குமார், பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சாலையோரத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதனை யாரும் கவனிக்கவில்லை. பிறகு அந்தப் பக்கம் வந்த மர்ம நபர்கள் சுரேஷ்குமாரின் சட்டைப்பையில் இருந்த பணம், வங்கி ஏடிஎம் கார்டுகள், ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இதனால் அவர் யார் என்று தெரியவில்லை. பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு அவரது உடல் 4 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது. பின்னார் சுரேஷ்குமார் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் அவரை காணவில்லை என்று கொடுத்த தகவலின் பேரில் மருத்துவமனையில் இருந்த சுரேஷ்குமார் உடல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று மாலை அவரது இறுதி சடங்குகள் நடந்தது. இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in