டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த 48நாட்களாக போராடி வருகிறார்கள். ஆனால் அதுகுறித்து இதுவரை அரசு தரப்பில் பொதுமக்களுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது சில அரசியல் கட்சி தலைவர்களும் அந்த போராட்ட களத்திற்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியிருப்பதால் போராட்டம் தற்போது இன்னும் வலுவடைந்துள்ளது.
மேலும், அப்போராட்டத்திற்கு ஆதரவு ட் தெரிவித்த மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல், ஏப்ரல் 1-ந்தேதியான இன்று போராட்டக்களத்திற்கு சென்று மக்களை சந்திக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதையடுத்து நேற்று ரஜினி தனது டுவிட்டரில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்த நிலையில், நடிகரும், சமத்துவக்கட்சி தலை வருமான சரத்குமார் 48வது நாளான நேற்று தூத் துக்குடி சென்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள சரத்குமார், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களை சந்தித்து எனது ஆதரவை தெரிவித்தேன். மேலும், போராட்டக் களத்தில் குமரெட்டியாபுரம் மக்கள் பயன்படுத்தும் மாசு கலந்த நீரை அருந்தி எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன் என குறிப்பிட்டுள்ளார்.