‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மார்ச்1-ந்தேதி முதல் தமிழ் சினிமாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்காரணமாக புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததோடு, படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை. ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சில டப்பிங் படங்கள் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வெளியிடப்பட்டு வருகிறது. அதற்கு தியேட்டர்காரர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
அதன்காரணமாக, தற்போது திரைக்கு வந்துள்ள ராம்சரண்-சமந்தா நடித்துள்ள ரங்கஸ்தலம் படம் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படங்களைப் போன்று அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகி வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது.
இது தமிழ்த்திரையுலகை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதன்காரணமாக, வெளிமாநில படங்களை தமிழகத்தில் வெளியிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விஷாலை வலியுறுத்தி வருகிறார்கள்.
அதனால் அடுத்தகட்டமாக, தெலுங்கு, மலையாளம் படங்களை தமிழ் நாட்டில் வெளியிடாமல், தமிழ்த்திரையுலகில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு அங்குள்ள தயாரிப்பாளர் சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் விஷால்.