ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் திரையுலகில் தற்போது நிலவி வரும் ஸ்ட்ரைக் காரணமாக கடந்த மார்ச்-1 முதல் எந்த தமிழ்ப்படம் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு, படம் தொடர்பான இதர பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் தான் 'காலா' படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்காக தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளிக்க மறுப்பதாக சொல்லப்பட்டது.
அதன்பின் ஒருவழியாக 'காலா' படத்தை சென்சாருக்கு அனுப்ப, தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் அளித்து, தற்போது தணிக்கை குழுவினரும் படத்தை பார்த்துவிட்டார்களாம். அதை தொடர்ந்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் 14 இடங்களில் கட் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.
ஆனாலும் இயக்குனர் பா.ரஞ்சித், நான்கு இடங்களில் அதிகாரிகள் குறிப்பிட்ட காட்சிகளை வெட்ட சம்மதிக்கவில்லையாம். இது தொடர்பாக சென்சார் அதிகாரிகளுடன் நீண்ட நேரம் விவாதத்தில் ஈடுபட்டாராம் ரஞ்சித். சான்றிதழ் தொடர்பான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.