ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவை பொறுத்தவரை இந்தவாரம் நான்கு படங்கள் வெளியாவதாக இருந்தது. அதில் மிகப்பெரிய படமாக மம்முட்டியின் 'பரோல்' கருதப்பட்டது. ஆனால் இன்று இந்தப்படம் வெளியாகாமல், வரும் ஏப்-5ஆம் தேதி இதன் ரிலஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
படம் ரிலீஸாகும் தியேட்டர்கள் வரை அறிவிக்கப்பட்டும் கூட, படம் வெளியாகாதது மம்முட்டி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகள் நல வாரியத்தில் இருந்து கிடைக்க வேண்டிய தடையில்லா சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் தான் படத்தை உரிய தேதியில் ரிலீஸ் செய்ய முடியாவில்லை என 'பரோல்' வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
அறிமுக இயக்குனர் சரத் சந்தித் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மம்முட்டியுடன் மியா, இனியா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப்படம் தவிர்த்து குஞ்சாக்கோவின் 'குட்டநாடன் மர்பாப்பா', விகடகுமாரன், சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில்' என மூன்று படங்கள் இந்த வாரம் வெளியாகியுள்ளன.