அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
இன்றைய தேதியில் நடிகைகளில் நயன்தாரா தான் நம்பர் ஒண். மாயா, அறம், நானும் ரவுடிதான் படங்கள் அவரின் கதை தேர்வுக்கு உதாரணம். அந்த வரிசையில் நயன்தாரா தற்போது நடித்து வருகிற படம் கோலமாவு கோகிலா.
மலையாள காலைக் காட்சி படத்தை போன்ற இந்த டைட்டிலை வேறெந்த நடிகையும் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்த துணிச்சல் நயன்தாராவுக்கு மட்டும்தான் இருக்கிறது. சிம்பு நடிப்பில் வேட்டை மன்னன் படத்தை இயக்குவதாக இருந்த நெல்சன் தான் இந்தப் படத்தை இயக்குகிறார். வேட்டை மன்னன் டிராப் ஆன பிறகு பல வருட போராட்டத்திற்கு பிறகு இப்போது நயன்தாராவை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். தயாரிப்பு தரப்பிலிருந்து கசிந்த வகையில் கோலமாவு கோகிலாவின் கதை இதுதான்....
கோலமாவு விற்று வாழ்க்கை நடத்தும் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் கோகிலா. குடும்பத்தின் வறுமையை போக்க கடுமையாக உழைக்கிறார். யாரும் துணையில்லாத ஒரு ஏழை குடும்பத்தில் ஒரு பெண் அழகாக இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வருமோ அதெல்லாம் வருகிறது. அதையெல்லாம் சமாளிக்கிறார். இந்த போராட்டத்துக்கு இடையில் ஒரு கொலை பிரச்சினையிலும் சிக்கிக் கொள்கிறார். இதனால் வில்லன்களும் அவரை துரத்துகிறார்கள். கோகிலாவிடம் இருப்பது அழகு என்ற ஆயுதமும், புத்திசாலித்தனமும். இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு எதிரிகளை சமாளித்து, தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கோகிலாவின் கதை.
படத்தில் நயன்தாராவுடன் சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு நடிக்கிறார்கள், அனிருத் இசை அமைக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார், லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.