டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை இப்படி ஒரு வெளியீடு நிறுத்தப் போராட்டம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. அனைத்துத் தயாரிப்பாளர்களும், அவர்களது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சொன்னபடி அவர்களது படங்களை வெளியிடாமல் நிறுத்திவிட்டார்கள். அந்த அளவிற்கு அவர்கள் விபிஎப் என்ற டிஜிட்டல் சேவை கட்டணம் மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.
இந்த மார்ச் மாத்த்தில் நேற்றுடன் சேர்த்தால் 5 வெள்ளிக் கிழமைகள் கடந்திருக்கிறது. வாரத்திற்கு சராசரியாக நான்கு படங்கள் வருவது வழக்கம். இந்த 5 வாரங்களில் 20 படங்களாவது வெளிவந்திருக்கலாம். ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தை மீறி யாரும் படங்களை வெளியிடவில்லை, ஒரே ஒருவரைத் தவிர. இயக்குனர் பவித்ரன் அவர் இயக்கிய 'தாராவி' படத்தை மட்டும் மார்ச் 2ம் தேதி வெளியிட்டார். அந்தப் படம் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் கடந்து போனது.
இந்த மாதம் வெளிவரவிருந்து 20 படங்களும் எப்படியும் ஸ்டிரைக் முடிந்து வெளிவரத் தயாராகும். இதனால், அடுத்த சில மாதங்களுக்கு படங்களை வெளியிடுவதில் சில சிக்கல்கள் இருக்கலாம். இவ்வளவு பெரிய ஸ்டிரைக்கையே நடத்திக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அந்த சிக்கலைத் தீர்ப்பது பெரிய விஷயமில்லை.
முழுஆண்டுத் தேர்வுகளும் இடைநிலை வகுப்புகள் வரை முடிந்து வருகிறது. பொதுத் தேர்வு எழுதுபவர்களைத் தவிர மற்றவர்கள் குடும்பத்துடன் இதனால் படம் பார்க்க வரலாம். எனவே, சீக்கிரமே ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வந்தால், மார்ச் மாதம் இழந்த வசூலை இந்த கோடை விடுமுறையில் எடுத்துவிடலாம்.