இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
துருவங்கள் 16' படத்தை இயக்கிய இளம் இயக்குநரான கார்த்திக் நரேன், அடுத்து இயக்கி முடித்துள்ள படம் 'நரகாசூரன்'. இப்படத்தை இயக்குநர் கௌதம் மேனனுடன் அவர் இணைந்து தயாரித்தார். படத்தை எடுத்து முடித்த பின் இருவருக்கும் இடையில் சிக்கல் எழுந்துள்ளது. அது பற்றி மறைமுகமாக சில தினங்களுக்கு முன்பு கார்த்திக் நரேன் டிவிட்டரில் பதிவிட்டார்.
அதற்கு பதில் தரும் விதமாக மறைமுகமாகவே கௌதம் மேனன் ஒரு பதில் டிவீட் போட்டார். அதற்கு பதிலடியாக கார்த்திக் நரேன் மேலும் ஒரு டிவீட் போட்டார். அதன் பின் இந்த விவகாரம் பரபரப்பானது. நேற்று சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து கௌதம் மேனன் இன்று அதிகாலை நீண்ட விளக்கக் கடிதம் ஒன்றைக் கொடுத்து கார்த்திக் நரேனிடமும் மன்னிப்பு கேட்டார்.
இப்போது 'நரகாசூரன்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பத்ரி கஸ்தூரி, கௌதம் மேனன் மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளார். “கௌதம் மேனன் இந்தத் துறையில் ஒரு இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் ஒரு காரணத்திற்காகத்தான் இருக்கிறார். ஒரு முறை கூட படத்தை திட்டமிட்ட காலத்திலோ, பட்ஜெட்டிலோ முடித்தது இல்லை. அவருடைய ஒரு படத்தைக் கூட முழு ஸ்கிரிப்ட்டுடன் ஆரம்பித்ததே இல்லை.
அதனால்தான், அவரால் முன்னணி நடிகர்களையோ, தயாரிப்பாளர்களையோ கவர முடியாமல் போய் விடுகிறது. வழக்கமான தயாரிப்பாளர்கள் அவரை ஆதரிக்காமல் போவதற்கும் அதுதான் காரணம். அதனால்தான் புதிய தயாரிப்பாளர்களையும், முதலீட்டாளர்களையும் அவர் நாட வேண்டியிருக்கிறது. அவருடைய சமீபத்திய முதலீட்டாளர்களாகப் பத்ரி கஸ்தூரி என்கிற நானும் புண்ணிய மூர்த்தி என்கிற இன்னொவரும் இணைந்தோம். திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர் புண்ணிய மூர்த்தி. 2012ம் ஆண்டிலிருந்து கௌதம் மேனன் படங்களில் முதலீடு செய்து வருகிறார்.
அப்படிப்பட்ட அவர் தன் பணத்தைத் திருப்பித் தருமாறு கௌதம் மேனன் மீது சமீபத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். 2016ம் ஆண்டில், ஐரோப்பா, ஆப்பிரிக்காவில், நான்கு ஹீரோக்களை வைத்து உருவாக்க உள்ள படத்திற்காக சுமார் 4 கோடி ரூபாயை புண்ணியமூர்த்தியிடமிருந்து கௌதம் மேனன் பெற்றுள்ளார். ஆனால், இதுவரை அந்தப் படத்தை அவர் ஆரம்பிக்கவேயில்லை. இதனால் கோபமடைந்த புண்ணிய மூர்த்தி அந்தப் படத்தைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டார். அது மட்டுமல்ல மேலும் புதிய படங்களுக்கு கையெழுத்திடுவதையும் நிறுத்திக் கொண்டார்.
'அச்சம் என்பது மடமையடா' படத்திற்காக நான் முதலீடு செய்தேன். இப்போது 'நரகாசூரன்' படத்தின் மொத்த தயாரிப்பையும் பார்த்துக் கொண்டேன். அதோடு, 'எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களுக்கும் பகுதியாக பைனான்ஸ் செய்திருக்கிறேன். தவறான இடைநிலை பிரநிதியாக செயல்பட்டு தவறுகளை இழைத்ததற்காக கௌதம் மேனன் மீது, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறேன். இப்படி நேர்மையற்ற இயக்குநர்களால் தமிழ் சினிமா தொடர்ந்து, கார்த்திக் நரேன், சர்ஜுன், புண்ணியமூர்த்தி, மற்றும் என்னைப் போன்றவர்களின் ஆர்வம் சிதைகிறது. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் இதில் தலையிட்டு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்,” என தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி தெரிவித்திருக்கிறார்.