'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பழம்பெரும் நடிகை ஜெயந்தி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தற்போது குணமடைந்து வருகிறார். தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிள்ளார்.
அவரை நேற்று கர்நாட முதல்வர் சித்தராமையாக தனியார் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார். அப்போது அவர் உடல் நிலை குறித்த நலம் விசாரித்தார். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படியும் மருத்துவமனையை அவர் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நடிகை பாரதி, நடிகர்கள் சிவராஜ்குமார், நாகேந்திரபிரசாத் ஆகியோரும் ஜெயந்தியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
"அம்மா ஜெயந்தி தற்போது பூரண குணமடைந்து வருகிறார். அவர் உடல்நிலை குறித்து யாரும் வருத்தப்பட வேண்டாம். வதந்திகளை பரப்பவும் வேண்டாம். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியிருக்கிறார் ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமார்.