ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி, ஈஸ்வரிராவ், நானா படேகர், ஹீமா குரேஷி, சமுத்திரகனி நடித்துள்ள காலா படத்தை பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். தனுஷ் தயாரித்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் 27ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் முழு வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் 27ந் தேதிக்குள் முடிவுக்கு வருமா என்று தெரியவில்லை. இதனால் காலா படம் 27ந் தேதி வருமா என்று ஊறுதியாக தெரியவில்லை. மே மாதத்திற்கு தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில் போராட்டம் நடக்காத கேரளாவில் படத்தை வெளியிடும் முயற்சி நடக்கிறது. கேரளாவில் ரிலீஸ் ஆனாலும் தமிழில்தான் ரிலீசாகும். கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழ்நாட்டு கிராம, நகர மக்கள் கேரளா சென்று காலாவை பார்க்க தயாராகி வருகிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களில் கேரள தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநில ரஜினி ரசிகர்கள் காலா படத்தின் ரசிகர் மன்ற காட்சிகளை நடத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஏப்ரல் 27ந் தேதி அதிகாலை 4 மணி ரசிகர் மன்ற காட்சிக்கு 300 ரூபாய் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
வேலை நிறுத்தம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். அதனால் காலா ரிலீசில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஒருவேளை முடியாவிட்டால் படம் கேரளாவில் வெளிவருதை தடுக்க முடியாது என்கிறார்கள்.