கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
மலையாள நடிகை வழக்கில் நடிகர் திலீப் சிறைசென்று ஜாமீனில் வெளிவந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கருதப்படுபவர் டிரைவர் மார்ட்டின்.. இவர் தான் சம்பவ தினத்தன்று நடிகை சென்ற காரை ஓட்டிச்சென்று நடிகையின் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர். அந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டவரும் இவர் தான்.
தற்போது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு வந்த மார்ட்டின் இந்த வழக்கு தொடர்பாக திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் மீதும் மற்ற சிலர் மீதும் குற்றசாட்டுக்களை அடுக்கியுள்ளான்.
திலீப்பை இந்த வழக்கில் சிக்க வைத்ததில் மஞ்சு வாரியருக்கும், நடிகை ரம்யா நம்பீசன், நடிகர் லால், இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் (தற்போது மோகன்லாலின் ஒடியன்' படத்தை இயக்கி வருபவர்) ஆகியோருக்கும் பங்கு என்று கூறியுள்ளார். இதற்காக மஞ்சு வாரியருக்கு மும்பையில் ஒரு பிளாட்டும், 'ஒடியன்' படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாகவும் கூறிய அவர், இன்னும் நிறைய விஷயங்களை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப் போவதாகவும் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.