மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் பிறந்து வளர்ந்த விஜய், முன்னணி ஹீரோவான பிறகு தன்னுடைய வீட்டை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு விட்டுவிட்டு அடையாறுக்கு வீட்டை மாற்றினார்.
அதன் பிறகு அடையாறு வீட்டிலிருந்து தன் மனைவி மக்களோடு நீலாங்கரை வீட்டிற்கு குடிபோனார். அடையாறு வீட்டில் விஜய்யின் அப்பா அம்மா தற்போது குடியிருந்து வருகின்றனர். தற்போது நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூர் என்ற ஏரியாவுக்கு வீட்டை மாற்றியிருக்கிறார் விஜய்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டில் தான் கடந்த சில வருடங்களாகக் குடியிருந்தார் விஜய். அந்த வீட்டை இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் இன்னும் கொஞ்சம் பெரிதாக கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார்களாம் அவருடைய குடும்பத்தினர். எனவே, பனையூரில் உள்ள வீட்டுக்குத் தற்போது மாறியிருக்கிறார் விஜய்.