தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு படத்தைத் தயாரித்தோ அல்லது இயக்கியோ எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிட வேண்டும். சில மாதங்கள் தாமதம் ஆனாலே அந்தப் படம் மீது பழைய படம் என்ற ஒரு இமேஜ் வந்துவிடும். ஒரு சில வருடங்கள் ஆகிவிட்டால் சொல்லவே வேண்டாம்.
சில வெற்றிப் படங்களைக் கொடுத்த எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனம், கௌதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட், குளோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்க, செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா மற்றும் பலர் நடிக்க உருவான படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. படம் பைனான்ஸ் பிரச்சினையால் வெளியிட முடியாத நிலை உருவானது. 2 கோடி ரூபாய் வரை நிதிச்சுமையில் இந்தப் படம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
படம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் வெளிவராமல் இருப்பதற்கு கௌதம் மேனன் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குளோ ஸ்டுடியோஸ் நிறுவனம், கௌதம் மேனனின் தொழில்முறை அல்லாத ஈடுபாடே படத்தின் சிக்கலுக்குக் காரணம் என சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
'நரகாசூரன்' படம் சம்பந்தமாக அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன், கௌதம் மேனன் மீது குற்றம் சுமத்தியுள்ள நிலையில் தயாரிப்பாளர் ஒருவரும் குற்றம் சொல்வது பரபரப்பாகியுள்ளது.