'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜெயம்ரவி நடிப்பில் 2008ல் வெளியான தாம்தூம் படத்தில் கதாநாயகி கங்கனா ரணாவத் தோழியாக நடித்த சாய்பல்லலி, கஸ்தூரிமான் படத்திலும் மீரா ஜாஸ்மினுக்கு தோழியாக நடித்தவர்.
துணைநடிகையாக சில படங்களில் நடித்தவர், அதன் பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் படிப்புதான் முக்கியம் என்று சொன்னதால் ஜார்ஜியாவுக்கு சென்று டாக்டருக்கு படித்தார்.
அங்கு படித்துக் கொண்டு இருந்தபோதுதான் பிரேமம் மலையாளப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தப் படம் பெரிய வெற்றியை பெற்றதால் சாய் பல்லவியை தமிழில் நடிக்க வைக்க போட்டிகள் நடந்தன. இறுதியில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சாய்பல்லவி.
கரு படம் வெளியாவதற்கு முன்பே தனுஷின் மாரி2, சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே. ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. தற்போது கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் டாக்டராக பயிற்சி செய்யாமல் நடிப்பை மட்டும் தொடர முடிவு செய்துள்ளாராம்.