ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராம்கோபால் வர்மா தற்போது நாகார்ஜுனா நடித்துவரும் 'ஆபீசர்' என்கிற படத்தை இயக்கிவருகிறார். ராம்கோபால் வர்மா இயக்குனராக அறிமுகமான 'உதயம்' படத்தை நாகார்ஜூனா தயாரித்தார். 25 வருடம் கழித்து தனது இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கும் ஆபீசர் படத்தை முதன்முதலாக தயாரித்து இருக்கிறார் வர்மா.
இந்தப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்ததாக நாகர்ஜூனாவின் மகன் அகில் நடிக்கும் படத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார் வர்மா. இந்தப்படம் அவரது வழக்கமான பாணியில் ஆக்சன், வயலன்ஸ் கலந்த காதல் கதையாக உருவாக இருக்கிறதாம்.
இந்த தகவலை வெளியிட்டுள்ள ராம்கோபால் வர்மா, மேலும் உதயம் படத்தில் பார்த்த நாகார்ஜுனாவை விட அகிலிடம் இன்னும் ஸ்பெஷலாக ஏதோ இருக்கிறது என கூறி நாகர்ஜுனாவிடம் ஐஸ் மழை பொழிந்துள்ளார்.
நேற்று முன்தினம் தான் 'தொல்லி பிரேமா' இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்சனில் அகிலின் மூன்றாவது படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவரது நான்காவது படத்தை தான் இயக்கப்போவதாக ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார் என்பதும், ஆனால் இதுகுறித்து நாகார்ஜூனா தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.