'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நான் முதல்வரானால் முதல் கையெழுத்து லோக் ஆயுக்தாவாகத்தான் இருக்கும் என நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசுகையில்,
படிப்பை முடித்தவுடன் உங்களை தாக்கப்போவது அரசியலும், ஊழலும் தான். ஆகவே மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவர்களை அரசியல்வாதியாக இருக்க சொல்லவில்லை, அரசியல் புரிதல் இருக்க வேண்டும். என்னை கல்லூரி, பள்ளி விழாக்களுக்கு செல்லவிடாமல் தடுக்கின்றனர்.
போருக்கு செல்பவர்களுக்கு பதற்றமும் பயமும் இருக்காது. மக்கள் நீதி மையத்தில் பொன்னாடைகள், பூமாலைகள், காலில் விழுவதை தவிர்க்கிறோம். இது எங்களிடம் நடக்காது. நாட்டை மாற்றும் பொறுப்பு, நம்முடைய கையில் உள்ளது.
நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு மத்தியில் யாருக்கும் இல்லை. நம் வீட்டுப் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை தமிழக அரசுக்கு உள்ளது.
திராவிடம் என்பது நாடு தழுவியது, அதை யாராலும் அழித்துவிட முடியாது. நான் முதல்வரானால் போடு முதல் கையெழுத்து லோக் ஆயுக்தாவாகத்தான் இருக்கும்.
இவ்வாறு கமல் பேசினார்.