'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ரஜினி, ஆன்மிக அரசியலை முன்னிலைப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். அவர், தனது ரசிகர்களிடம் எப்போது பேசினாலும், ஆன்மிகத்தை முக்கியமாக வைத்து அரசியல் செய்யப் போவதாக கூறுவதோடு, அதையே பிரதானமாக வைத்தே, லோக்கலில் நீங்களும் அரசியல் செய்ய வேண்டும் என்றே சொல்லி வருகிறார்.
அதையடுத்தே, கட்சித் துவங்குவதற்கு முன் இமயமலை அடிவாரத்தில் இருக்கும் பாபா கோவிலுக்கும், அங்குள்ள குகைகளுக்குள் இருக்கும் சித்தர்களை சந்திக்க ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு விட்டு, சென்னை திரும்பி இருக்கிறார்.
இந்த முறை ஆன்மிகப் பயணம் சென்றபோது, அவர் வடகிழக்கு மாநிலங்களுக்கும் சென்று, அங்குள்ள ஆன்மிக தலங்களுக்கும் சென்று திரும்பி இருக்கிறார்.
வழக்கத்துக்கு மாறாக, இம்முறை தனது மொத்த ஆன்மிகப் பயணத்தை வீடியோ பதிவாக்கித் திரும்பி இருக்கும் ரஜினி, வீடியோ பதிவு அனைத்தையும், தனக்கு நெருக்கமான சினிமா நண்பர்களிடம் கொடுத்து, அதை ஆன்மிக ஆவணப்படமாக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறார். தேவையானால், கட்சித் துவங்கும் நேரத்தில், இந்த ஆவணப் பட சி.டி.,யை ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது.