கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
நடிகர் ரஜினி, ஆன்மிக அரசியலை முன்னிலைப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். அவர், தனது ரசிகர்களிடம் எப்போது பேசினாலும், ஆன்மிகத்தை முக்கியமாக வைத்து அரசியல் செய்யப் போவதாக கூறுவதோடு, அதையே பிரதானமாக வைத்தே, லோக்கலில் நீங்களும் அரசியல் செய்ய வேண்டும் என்றே சொல்லி வருகிறார்.
அதையடுத்தே, கட்சித் துவங்குவதற்கு முன் இமயமலை அடிவாரத்தில் இருக்கும் பாபா கோவிலுக்கும், அங்குள்ள குகைகளுக்குள் இருக்கும் சித்தர்களை சந்திக்க ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு விட்டு, சென்னை திரும்பி இருக்கிறார்.
இந்த முறை ஆன்மிகப் பயணம் சென்றபோது, அவர் வடகிழக்கு மாநிலங்களுக்கும் சென்று, அங்குள்ள ஆன்மிக தலங்களுக்கும் சென்று திரும்பி இருக்கிறார்.
வழக்கத்துக்கு மாறாக, இம்முறை தனது மொத்த ஆன்மிகப் பயணத்தை வீடியோ பதிவாக்கித் திரும்பி இருக்கும் ரஜினி, வீடியோ பதிவு அனைத்தையும், தனக்கு நெருக்கமான சினிமா நண்பர்களிடம் கொடுத்து, அதை ஆன்மிக ஆவணப்படமாக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறார். தேவையானால், கட்சித் துவங்கும் நேரத்தில், இந்த ஆவணப் பட சி.டி.,யை ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது.