விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 500 படங்கள் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயந்தி, உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நீர் ஆகாரங்கள் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. நாளை, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட இருக்கிறார்.
இதனிடையே அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவியது. இதை ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமார் மறுத்துள்ளார். மருத்துவ நிர்வாகமும் அவர் இறந்ததாக வந்த செய்தியை மறுத்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.