இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள 'ரங்கஸ்தலம்' படம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தெலுங்கு ரசிகர்களிடம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது. 80களில் நடக்கும் கதையாக கிராமத்துப் பின்னணியில் இந்தப் படம் தயாராகியுள்ளது.
ராம்சரண், சிட்டிபாபு என்ற கிராமத்து இளைஞராகவும், சமந்தா, ராமலட்சமி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். இருவருமே மாநகரத்தில் வாழ்ந்தவர்கள். அதனால், அவர்கள் கிராமத்துக் கதாபாத்திரங்களில் எப்படி நடிப்பார்கள் என்ற சந்தேகம் படத்தின் டீசர் வந்ததுமே தீர்ந்துவிட்டது.
ராம்சரண், சமந்தா இருவரும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்கள் என பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்தப் படத்தில் 80களின் ஹீரோவாக நடிப்பதற்கு என்ன செய்தேன் என்பது பற்றி ராம்சரண் தெரிவித்துள்ளார்.
“அப்பா சிரஞ்சீவி நடித்த 80களின் படங்களான 'ஊரிக்கிச்சின மாட்டா, மன ஊரி பாண்டவலு, ஆபத்பாந்தவடு” ஆகிய படங்களையும், ரஜினிகாந்த் நடித்த சில படங்களையும் இயக்குனர் சுகுமார் பார்க்கச் சொன்னார். அவர்களது தோற்றத்தையும், நடிப்பையும் எனக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளேன்,” என ராம்சரண் தெரிவித்துள்ளார்.