மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மைய்யத்தில் தினமும் ரசிகர்கள் திரண்டு வந்து அவரை ஆழ்வார்பேட்டை அலுவலத்தில் சந்தித்து சேர்ந்து வருகிறார்கள். நேற்று புதுச்சேரி மாநில இளைஞர்கள் சுமார் 200 பேர் வந்து மக்கள் நீதி மைய்ி யத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களிடையே கமல் பேசியதாவது:
அன்பையும், நேர்மையும் தேடி வந்துள்ளீர்கள், நானும் அதைத்தான் தேடி கொண்டிருந்தேன். அதனால் தான் நாமும் இணைந்துள்ளோம். எனக்கு வழி சொன்னவர்கள் நீங்கள் தான். இனி நடப்பதெல்லாம் செயலாக இருக்க வேண்டும். இந்த கூட்டம் வெறும் ஊர்வலம் செல்வதற்காக அல்லாமல் நமக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க அரசாங்கத்தை தூண்டுவது அல்லது அரசையே அமைப்பதாக இருக்க வேண்டும். உங்களை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை கூடுகிறது. இனி வெல்வது மட்டும் தான் ஒரே வழி என்றார் கமல்.