ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு 'மகாநதி' என்ற பெயரில் தெலுங்கில் படமாக்கப்பட்டுள்ளது. நாக் அஷ்வின் இயக்கியுள்ள இந்த படத்தை 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் தமிழிலும் டப் செய்து வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் இந்த படத்தில், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். துல்கர் சல்மான் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது.
படப்பிடிப்பு முடிவடைந்ததும் சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு இப்போது டப்பிங் வேலைகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மலையாளியான துல்கர் சல்மானுக்கு தெலுங்கு தெரியாது என்பதால் அவருக்காக டப்பிங் பேச ஒருவரை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால் தானே சொந்தக்குரலில் தெலுங்கில் டப்பிங் பேச வேண்டும் என்று துல்கர் சல்மான் விருப்பம் தெரிவித்தார். அதற்கு இயக்குநர் ஓகே சொல்ல, தற்போது சொந்த குரலிலேயே தெலுங்கில் டப்பிங் பேசி வருகிறார் துல்கர் சல்மான்.