ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜல்லிக்கட்டு, நெடுவாசல் என தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு போராட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். சில போராட்டங்களில் அவரும் கலந்து கொண்டார்.
தற்போது, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல்வாதிகளின் ஆதரவை நாடாத மக்கள், ஜல்லிக்கட்டு, விவசாய போராட்டங்களைப்போன்றே தாங்களே நடத்தி வருகிறார்கள்.
இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாசும் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், "நடந்து முடிந்த பின்னால் எதையும் தடுக்க முடியாது என்பதை உணர மறுத்தால் “விபரீத” விளைவுகளுக்கு யார் பொறுப்பு..? மக்களே அரசு, மக்களுக்காகவே அரசு... ஸ்டெர்லைட்டை தடை செய்" என பதிவிட்டுள்ளார்.