பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சமீபத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இது அவருக்கு பெண் தேடும் ஒரு நிகழ்ச்சியாகும். 16 இளம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஆர்யாவுடன் கலந்து பேசி அவரது மனதை கவர வேண்டும். இறுதியில் தனக்கு பிடித்தமான பெண்ணை ஆர்யா மணந்து கொள்வார் என்பது அந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
இதன் பிடிப்புகள், தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் யாழ்பாணத்தில் உள்ள பழம்பெரும் தமிழ் நூலகத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நூலகத்திற்கு சென்ற பொதுமக்களை படக்குழுவினர் தடுத்து நிறுத்தியதாகவும், நூலகத்தின் அமைதியை கெடுத்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
அதோடு நூலகத்தின் வெளியே படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுவிட்டு உள்ளே படப்பிடிப்பு நடத்தியதாக யாழ்பாண நகராட்சி ஆணையரும் கூறியுள்ளார். இதனால் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது. படிப்பிடிப்பை வேறு இடத்தில் வைத்துக் கொள்ள படப்பிடிப்பு குழுவினர் முடிவு செய்துள்ளனர்.