தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற "மாணிக்க மலராய பூவி..." என்ற பாடலில் அறிமுக நடிகை பிரியா வாரியர் காட்டிய கண்ணசைவு இளைஞர்களின் உலகையே அதிர வைத்தது. பேஸ்புக், டுவிட்டர் என அவர் கண்ணசைவு உலக புகழ்பெற்றது. தற்போது பிரியா வாரியரின் கண்ணசைவை வைத்து போலீசார் சாலை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலோ, கேரளாவிலோ அல்ல... குஜராத்தில். இங்குள்ள வதோதரா நகர போலீசார் தங்களது இணைய தளம், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் விளம்பர போர்டுகளில் பிரியா வாரியரின் கண் அசைவு படத்தை போட்டு அதன் அருகில் "கண் அசைவுகளாலும் விபத்துக்கள் நேரலாம். கவனச் சிதறலுக்கு ஆளாகாமல் முழு கவனத்துடன் வாகனத்தை ஓட்டுங்கள்" என்று வாசகம் எழுதியுள்ளனர். இந்த விளம்பரம் வைரலாக பரவி வருவதோடு. போலீசாருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
"மக்களுக்கு நேரடியாக ஒரு கருத்தை சொல்வதை விட திரை பிரபலங்களின் புகழ்பெற்ற வசனங்கள், ஸ்டைல்களில் சொல்லும் போது வேகமாக சென்றடையும். இதுவரை பாலிவுட் நடிகர், நடிகைகளை பயன்படுத்தி விளம்பரம் செய்தோம். ஆனால் பிரியா வாரியரின் கண்ணசைவு விளம்பரம்தான் பெரிய அளவில் மக்களை சென்று சேர்ந்துள்ளது" என்கிறார் வதோதரா போலீஸ் கமிஷனர் மனோஜ் சசிதர்.