ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இளையராஜா இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுதல் குறித்து சில கருத்துக்களை கூறியிருந்தார். இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை கேலி செய்வதாகும், அவர்களை அவமானப்படுத்துவதாகும் இருக்கிறது என்று சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் தலைவர் சாம் யேசுதாஸ் தலைமையில் இளையராஜா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டம் குறித்து முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தால் இளையராஜா வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்துக்கு தடையும் விதித்திருந்தனர். தடையை மீறி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இளையராஜா வீட்டுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.