இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இளையராஜா இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுதல் குறித்து சில கருத்துக்களை கூறியிருந்தார். இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை கேலி செய்வதாகும், அவர்களை அவமானப்படுத்துவதாகும் இருக்கிறது என்று சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் தலைவர் சாம் யேசுதாஸ் தலைமையில் இளையராஜா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டம் குறித்து முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தால் இளையராஜா வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்துக்கு தடையும் விதித்திருந்தனர். தடையை மீறி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இளையராஜா வீட்டுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.