தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எண்பதுகளில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சாந்தி கிருஷ்ணா. பல வருடங்களுக்கு பின் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் என்ட்ரி ஆகியுள்ளார். கடந்த வருடம் நிவின்பாலியின் அம்மாவாக 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' என்கிற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது குஞ்சாக்கோ போபனின் அம்மாவாக 'குட்டநாடன் மர்பாப்பா' என்கிற படத்தில் நடித்துள்ளார். வழக்கமாக சீரியஸ் ரோல்களில் நடித்துவந்த சாந்தி கிருஷ்ணா, இந்தப்படம் முழுக்க காமெடியில் அசத்தியிருக்கிறாராம்.
ஆரம்பத்தில் காமெடி காட்சிகளில் நடிக்க ரொம்பவே தடுமாறினாராம் சாந்தி கிருஷ்ணா. ஆனால் படத்தில் இவருடன் பல காட்சிகளில் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் தர்மாஜன் போல்காட்டி, இவருக்கு காமெடியாக நடிக்கும் நுணுக்கங்களை சொல்லிக்கொடுக்க, அடுத்துவந்த நாட்களில் காமெடியில் நன்றாக பிக்கப் ஆகிவிட்டாராம் சாந்தி கிருஷ்ணா.