தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
கோலிசோடா படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த மார்ச் மாதமே ரிலீசாக வேண்டிய படம் , திரையுலக ஸ்டிரைக் காரணமாக வெயிட்டிங்கில் உள்ளது.
மேலும், கோலிசோடா படத்தைப் போலவே இந்த கோலிசோடா-2 படத்திலும் ஒரு சமூக பிரச்சினையை கையில் எடுத்திருப்பதாக சொல்லும் விஜய் மில்டன், இந்த படத்தில் சமுத்திரகனி, கெளதம்மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக சொல்கிறார்.
குறிப்பாக, கெளதம்மேனன் ஒரு டைரக்டர் என்றபோதும், ஒரு சிறந்த நடிகராகவும் தன்னை நிரூபித்திருப்பதாக சொல்கிறார். கதைப்படி மிடுக்கான இன்ஸ்பெக்டராக நடித்துள்ள அவர் வரும் காட்சிகள் தியேட்டரில் கைதட்டல் வாங்கும். அந்த அளவுக்கு அசத்தலாக நடித்துள்ளார். அதோடு, இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் சமுத்திரகனியை போன்று இயக்குனர் கெளதம்மேனனும் பிசியான நடிகராகி விடுவார் என்கிறார் விஜய் மில்டன்.