பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ஜெய் உடனான காதல் முறிவுக்குப் பிறகு அஞ்சலிக்கு பட வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கியுள்ளன. சசிகுமாருக்கு ஜோடியாக நாடோடிகள்-2 படத்தில் நடித்து வரும் அஞ்சலி, அடுத்து விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு.அருண் குமார். அந்தப்படம் பாராட்டப்பட்ட அளவுக்கு கமர்ஷியலாக வெற்றியடையவில்லை. எனவே மீண்டும் அவரது இயக்கத்தில் 'சேதுபதி' படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி.
இந்த இரண்டு படங்களைத்தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் அருண் குமார். 'பாகுபலி 2' படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க அஞ்சலியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விஜய்சேதுபதி படம் என்பதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான 'இறைவி' படத்தில் ஏற்கனவே இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.